சினிமாவை பற்றி தெரியாதவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடிகை சுகாசினி

Default Image

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இன்விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, நடிகை சுகாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், கமல் மற்றும் ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே நின்று சிகரெட் பிடிப்பார் என்றும், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், கொஞ்சம் பயப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், உதவி இயக்குனர், நடிகர் ரஜினியை மேலே பார் என்றால் கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இவ்வாறு சினிமாவை பற்றியே தெரியாமல் இருந்த ரஜினி தான், இன்று மாபெரும் உச்சத்துக்கு சென்றுள்ளார். மேலும், இப்படி சினிமா தெரியாதவர்களுக்கு பள்ளியாகவும், கல்லூரியாகவும் விளங்கியவர் தான் பாலச்சந்தர் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சுகாசினி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 09052025
India Pak War tensions
India Pakistan Tensions
schools shut
Jammu and Kashmir