நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த மாணவிகள் தற்கொலை! இயக்குனர் சுசீந்திரன் இரங்கல்!

Default Image

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொடர்ந்து நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்வது மனவேதனை அளிக்கிறது. சகோதரி அனிதாவை தொடர்ந்து, இன்று ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் மிகஉந்த வேதனை அளிக்கிறது. இருவரின் பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்