சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சீமராஜா படத்தில் முடிந்து விட்டதால் விடைபெறுகிறேன் என்று டுவிட் போட்டுள்ளார்.
unknown nodeதிருமணம் செய்த பின்னர் நடிகை சமந்தா ரொம்பவே பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா சீமராஜா என்ற படத்தில் நடித்து வந்தார்.
unknown nodeஇதில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதனால் அவர் தனது டுவிட்டரில் ’24ஏஎம் ஸ்டுடியோவின் தயாரிப்பான ‘சீமராஜா’ படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.
unknown nodeசீமராஜா படப்பிடிப்பு குழுவினருக்கு என் நன்றி. பெஸ்ட் டீமாக ஆக்கிய சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராமுக்கும் நன்றி’ என்று பதிவிட்டு இருந்தார். சமந்தாவின் பதிவிற்கு 24ஏம் ஸ்டுடியோஸ் டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.