வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் இயங்கும் என அறிவிப்பு1

Default Image

தியேட்டர் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள தியேட்டர்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என  அறிவித்துள்ளனர்.

டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து, புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாளை முதல் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட உள்ளன. 8 சதவீத கேளிக்கை வரி, திரையரங்கு உரிமக் கட்டணத்தை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களை மூடி வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது எனவும், 147 தியேட்டர்களும் இயங்கும் என சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்