கடற்கரையில் சேலை தான் அணிந்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா ? என சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்த நபர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றபோது, கடற்கரையில் பிகினி உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டனர்.
unknown nodeஇந்நிலையில் அது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ராதிகா ஆப்தே, ”பிகினி உடையணிந்ததற்காக என்னை கிண்டல் செய்பவர்கள், நான் பீச்சில் சேலை அணிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown nodeசமீபகாலமாக இந்திய நடிகைகள் பலரும் புகழ் பெற வேண்டி பிகினி அணிந்த புகைப்படத்தை சமூகவலைத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. நடிகை சமந்தா கடந்த முறை இதே போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்த போது ஒருவர், ”திருமணத்திற்கு பின் பிகினி உடையை அணிவது சரிதானா ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு உடனடியாக பதிலளித்த சமந்தா, ”நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கு நீங்கள் கட்டளையிட வேண்டாம். உங்கள் பணியை நீங்கள் பாருங்கள். பிடித்தால் இதை பாருங்கள், இல்லையெனில் அடுத்த புகைப்படத்தை பாருங்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.