தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து?

Default Image

தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக  அறிவித்துள்ளது.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்கக் கோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை.

மேலும், 8% கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி திரையரங்கு உரிமையாளர்கள் வரும் 16-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், க்யூப் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு ஏற்படாததால் வரும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்