காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகை!

Default Image

காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த நடிகை வரலட்சுமி. 

கொரோனா வைரஸின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் தான் மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களை காக்கும் பணியில், காவல்துறை அதிகாரிகள் மிக தீவிரமாக  இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘கொரோனா காலத்தில் தங்கள் குடும்பங்களை கூட நினைக்காமல் இரவு பகலாக மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் காவல்துறை கடவுளுக்கு சமம் என்றும், போலீசார் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.’ என  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்