சினிமாவில் ஒரே மாதிரி நடித்தால் ஓரம் வைத்து விடுகிறார்கள் -நிவேதா பெத்துராஜ்

Nivetha Pethuraj is the one the same role in the cinema

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான  நிவேதா பெத்துராஜ். தற்போது இவர்  9 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு .நான் எனது சிறு வயதிலேயே துபாய்க்கு சென்றுவிட்டேன்.இருந்தாலும் தமிழ் கலாசாரம் என்னை விட்டு போகவில்லை.

இந்நிலையில் போதைக்கு அடிமையாகிற மாதிரி  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது என் குடும்பத்தினருக்கு பிடிக்காது என்பதால் அதை நான் மறுத்து விட்டேன்.

மேலும்  சினிமாவில்  கதாநாயகிகள்  சிறிது காலம் மட்டுமே இருக்க முடியும். மேலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தால்  ரசிகர்கள் ஓரம் தள்ளிவைத்து விடுகிறார்கள் என கூறினார்.