எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன்பு, சினேகாவுக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம் : நடிகர் பிரசன்னா

Default Image

நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற பாடத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பின் காதல் வயப்பட்ட இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், நடிகர் பிரசன்னா மலையாளத்தில், பிரதர்ஸிடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன், சினேகாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சினேகாவை மனதை பிறகு வாழ்க்கையில், நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மலையாளத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். இதனையடுத்து பிரதர்ஸ்டே என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் இது நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புவதாகவும், சரளமாக மலையாளம் பேச கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்