ஜனநாயகன் பட வழக்கு வாபஸ்... பின்வாங்கிய தயாரிப்பு நிறுவனம்!

வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

jana nayagan movie censor issue

சென்னை :உயர் நீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தொடரப்பட்ட ரிட் மனு தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN சார்பில், வழக்கை திரும்பப் பெறுவதற்கான கடிதம் நீதிமன்ற பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் மூலம் அளிக்கப்பட்ட இந்தக் கடிதத்தில், “தற்போது மேல்முறையீடு தொடர விருப்பமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவை (Revising Committee) அணுகியுள்ளது. சென்சார் போர்டு அளித்த UA சான்றிதழில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் மறு ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நடைபெற்று வருவதால், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பட வெளியீட்டு பணிகளுக்கு புதிய தடை இல்லாமல் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.நீதிமன்ற பதிவு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 10) நீதியரசி பி.டி. ஆஷா முன்னிலையில் “வழக்கை வாபஸ் பெற” என்ற அடிப்படையில் பட்டியலிடப்பட உள்ளது. இதன்பின் நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தொடர்பான சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்சார் மறு ஆய்வுக் குழுவின் முடிவு எதிர்பார்த்தபடி வருமானால், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு படக்குழுவினருக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நல்ல செய்தியாக அமைந்துள்ளது.ஒட்டுமொத்தமாக, ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் விவகாரத்தில் ஏற்பட்ட இந்தத் திருப்பம் பட வெளியீட்டுக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதால், மறு ஆய்வுக் குழுவின் முடிவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதியாகும் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது.