நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர்.
unknown nodeஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeடிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். மேலும், 16-வது போட்டியாளராக மகேஸ்வரி சாணக்கியன் என்ட்ரி கொடுத்தார். இவர், கடைசியாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானத்தின் மனைவிகளில் ஒருவராக நடித்தார்.
இதையும் படிங்களேன் –ஜூன்-9 திருமணம்.! அக்டோபர்-9 இரட்டை குழந்தை.! சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்னேஷ்…?
unknown nodeமகேஸ்வரி உள்ளே நுழைந்த பின், தொகுப்பாளர் கமலிடம் தன்னை பற்றி அறிமுக செய்ததோடு தனது வாழ்க்கை பற்றியும் இங்கு வந்ததற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்பொழுது, “நான் மிகப் பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன்.
unknown nodeஆனால், அது ஒருவருடத்திற்குள் களைந்துவிட்டது, தற்போது மகன்தான் எனக்கு எல்லாம். அவன் படிப்பிற்காக பிக்பாஸ் வந்துள்ளேன், சப்போர்ட் பண்ணுங்க” என்று கண்கலங்கியபடி பேசினார். உடனே கமல் மகேஸ்வரிடம் பேசி சமாதானப்படுத்தினார்.