பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலேயே கண்கலங்கிய மகேஸ்வரி.!

Default Image

நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர்.

Bigg Boss house

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mahesshwariடிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். மேலும், 16-வது போட்டியாளராக மகேஸ்வரி சாணக்கியன் என்ட்ரி கொடுத்தார். இவர், கடைசியாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் சந்தானத்தின் மனைவிகளில் ஒருவராக நடித்தார்.

இதையும் படிங்களேன் – ஜூன்-9 திருமணம்.! அக்டோபர்-9 இரட்டை குழந்தை.! சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்னேஷ்…?

VJ Maheshwari 1

மகேஸ்வரி உள்ளே நுழைந்த பின், தொகுப்பாளர் கமலிடம் தன்னை பற்றி அறிமுக செய்ததோடு தனது வாழ்க்கை பற்றியும் இங்கு வந்ததற்கான காரணத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்பொழுது, “நான் மிகப் பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன்.

VJ Maheshwari 3

ஆனால், அது ஒருவருடத்திற்குள் களைந்துவிட்டது, தற்போது மகன்தான் எனக்கு எல்லாம். அவன் படிப்பிற்காக பிக்பாஸ் வந்துள்ளேன், சப்போர்ட் பண்ணுங்க” என்று கண்கலங்கியபடி பேசினார். உடனே கமல் மகேஸ்வரிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்