ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கணும்! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவிய வில்லை என்றாலும் கூட சொல்லும் அளவிற்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களை உற்சாகபடுத்துவதற்காக வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி நடிகர் கீர்த்தி சுரேஷ் வெப்தொடர்களிலும்மே நடிக்க ஆரம்பித்து விட்டார்.  ரசிகர்களை மகிழ்விக்க இப்படி வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.  இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது தனக்கு ரசிகர்களை மகிழ்விப்பது மட்டும்தான் ஒரே எண்ணம்.

அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!

அவர்களுக்காக நான் வித்தியாச வித்தியாசமாக கதாபாத்திரங்களை தேர்வு செய்ய நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.  இது குறித்து பேசிய அவர் ” ரசிகர்களை மகிழ்விப்பது போல என்னுடைய சினிமா கேரியரில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. நான் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ என்பதை எல்லாம் பற்றி நான் யோசிக்கமாட்டேன்.

படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த படத்தில் நடித்தால் நமக்கு சரியாக இருக்கும் என்று தோணும். அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து தான் நடித்து கொண்டு இருக்கிறேன். ஆனால், அதே சமயம் நான் எப்போதும் வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்யவேண்டும்.

அந்த மாதிரி ஒரே கதாபாத்திரத்தை போல நடிக்காமல் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் விரும்பினேன்” எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது ‘சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா’
ற்றும் ‘அக்கா’ வெப் சீரிஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்