“தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்” மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!

மனைவி ஆர்த்தியிடம் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி நடிகர் ஜெயம் ரவி அடையார் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Jayam Ravi - aarthi

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு செய்தியில் இடம் பிடித்து வருகிறார்.

திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று, ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்பொழுது, ஜெயம் ரவி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, ஆர்த்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆம், ஜெயம் ரவி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக் கோரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. இருவரும் ஏன் விவாகரத்து பெறுகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ஜெயம் ரவியின் விவகாரம் குறித்தும் விவாதம் நடந்து வருகிறது.

இது குறித்து விளக்கமளித்த நடிகர் ஜெயம் ரவி, ” ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன் “வாழு வாழ விடு” என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம் வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan