களவாணி – 2 திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை!

Default Image

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களவாணி-2 திரைப்படம். இப்படத்தில் விமல் மற்றும் ஓவியா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் உரிமையை பெற்ற ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மூன்று கோடி ரூபாய்க்கு மெரினா பிக்சர்ஸ்க்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, மெரினா பிக்சர்ஸ் இந்த உரிமையை க்யூப் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி, ஸ்ரீ தனலட்சுமி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், களவாணி -2 திரைப்படத்தை ஜூன்-10ம் தேதி வரை வெளியிட இடைகாலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்