என்னது கருப்பு பணமா? நான் வெயிலில் கருத்த பணம் – kpy பாலா பதிலடி!

KPY Bala

சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார்.

கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.

இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். ஆம், தான் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியை  ஏழைகளுக்கு செலவு செய்து உதவி வருகிறார். இவ்வாறு தனியாக உதவி வந்த kpy பாலா, அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இருவரும் இணைந்து தற்பொழுது பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பாலா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்பொழுது, ஒருவர் தான் உதவி செய்த வீடியோ ஒன்றில் கமெண்ட்ஸ் செய்திருந்தார்.  அதில், இத்தனை உதவிகளை வழங்கி வரும் இவர், யாருடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார் என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, அது மாதிரியான பணத்தில் நான் செலவு பண்ணல், வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில்தான் மக்களுக்கு உதவி செய்கிறேன்” என்று கூறினார்.  மேலும், எனக்கு பின்னாடி உதவி செய்யும் ஒரே நபர் அது ராகவா லாரன்ஸ் சார் மட்டும் தான் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்