ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூமுருகனின் தரமான சிறப்பான சம்பவம் இதுதான் போல!

Default Image

ஜோக்கர் எனும் படத்தின் மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரது அலட்சியத்தையும் சரமாரியாக விமர்சித்திருந்தார் இயக்குனர் ராஜூ முருகன். இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது.

இந்த படத்தை அடுத்து அவர் எந்த படத்தை இயக்க போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் நிலவியது. இவர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படத்தின் முதல் பாடலுக்கான புரோமோ வெளியிடபட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சந்தோஷ் நாராயணன் சிறையில் அடைப்படது போலவும், அதற்கான காரணங்களை அங்குள்ளவர்கள், எதற்காக கைதானீரகள் ஹைட்ரோகார்பன் பிரச்சனையா?, நீட் பிரச்சனையா,  இலங்கை பிரச்சனையா என பல கேள்விகளை கேட்பது போலவும் ஒரு பாடல் பாடினேன் கைது செய்துவிட்டார்கள் என கூறுவது போல அமைந்துள்ளது. இந்த பாடல் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்