டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் தவிக்கும் பிரபல நாயகி மருத்துவமனையில் !

Default Image

பாலிவுட்  பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த்போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

நோய்யில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்