தனுஷ், நயன்தாராவின் “யாரடி நீ மோகினி” திரைப்படத்தின் 11 வருட கொண்டாட்டம்

Default Image

“ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா மாபெரும் நடிகர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும்  தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளனர். இவர்கள் 11 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஜோடி சேர்ந்த நடித்த திரைப்படம் “யாரடி நீ மோகினி”.

இத்திரைப்படம் “ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத் திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த  2008-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது.

இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கார்த்திக் குமார், ரகுவரன்,கருணாஸ், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இவர் கடைசியாக நடித்த படம் “யாரடி நீ மோகினி”. ரகுவரன் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.

இப்படம் மற்ற காதல் கதையாய் காட்டிலும் சற்று வித்தியாசமாக அமைந்தது. படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் சிறப்பாக நடித்து இருந்தனர்.அதனால் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்  இப்படம் தற்போது 11-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.அதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்