பிரபல இயக்குநர் மீது மாட்டு சாணி வீச்சு….!!

Default Image
மலையால இயக்குனர் பிரியநந்தனன் மீது மாட்டுச்சாணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமான மலையால டைரக்டர் பிரியநந்தனன் . இவர் சமீப காலமாக ஐயப்பன் கோவில் விவகாரம் குறித்து பேசிவருகின்றார்.இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்வததை தடுக்கும் போராட்ட குழுவினரை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு போராட்டம் நடத்தியவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரின் வீட்டின்  முன்னால் ஐயப்பன் கோவில் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவர் நேற்று காலை , எதிர்ப்பு காரணமாக தனது முகநூல் பதிவை அவர் நீக்கினார். இந்த நிலையில் நேற்று காலை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளசிரா பகுதியில் இருக்கும் தன்னுடைய வீட்டு அருகாமையில் இருக்கும் கடைக்கு பிரியநந்தனன் சென்றார். அப்போது ஐயப்பன் கோவில் எதிர்ப்பாளர்கள் சிலர் மாட்டு சாணத்தை அவர் மீது வீசி  தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்