நடிகர் சிம்பு, ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது சென்னை. இதற்கடுத்தப்படியாக கடலூர் மாவட்டம் உள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 356 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆனந்தன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், கடலூர் மாவட்ட சிம்பு நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார்.
unknown nodeஇதனையடுத்து, இந்த செய்தியை கேட்ட நடிகர் சிம்பு, ஆனந்தனை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் ஆனந்தன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.