மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் – நடிகர் யோகி பாபு

Default Image

மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  144

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று கையில் சேமிப்பில்லாமல் பலர் துன்பப்பட முக்கிய காரணம் மதுக்கடைகளே! மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்