நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் மற்றும் விஜயின் படங்கள் ரிலீசானால், அவர்களது ரசிகர்கள் எப்போதும் அதை பெரிய அளவில் கொண்டாடுவதுண்டு. அதுபோல இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட்-ல் பாடை கட்டு என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்து இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டானது.
இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் #ripvijay என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, இந்த ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளனர்.
unknown node