உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு புதிய வரவாக கஸ்துரி சங்கர் அவர்கள் என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில், கஸ்தூரியிடம், இதற்கு முன்பு இந்நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன பிரபலங்கள் குறித்து சேரன் கூறுகிறார். அதில் மீராவை குறித்து சேரன் கூறுகையில், கஸ்தூரி சேரனை கிண்டல் செய்கிறார்.
இந்நிலையில், அவர் தர்சனிடம் நீங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்த தர்சன், ‘மக்கள் என்னை பார்க்க வேண்டும்’ என்பதற்காக தான் வந்ததாக கூறினார். ஷெரினிடம் இதே கேள்வியை கேட்ட போது, நான் தர்சனுக்காக வந்திருக்கிறேன் என கூறுகிறார்.
unknown node