30 ஆண்டுகள் தமிழ்நாட்டையே வழிநடத்தியவர் – சசிகலாவின் கணவர் பற்றி பாரதிராஜா உருக்கம்

Default Image

சின்ன அம்மா என அழைக்கப்பட்ட   சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் தமிழ் ஈழ விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் என்றும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைத்ததில் முக்கியபங்கு வகித்தவர் என்றும் கூறியுள்ளார்.

அரசியல் சாணக்யன் என்று ராஜிவ் காந்தியால் பாராட்டப்பட்டவர், 25 ஆண்டு காலம் சந்நியாசியாக வாழ்ந்தவர், அரசியலில் உச்சத்திற்கு வர வாய்ப்பிருந்தும் விரும்பாமல் தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகாலம் இயக்கியவர் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்