தயாரிப்பாளரை பார்த்து கதாநாயகனுடன் படுக்க யாரை அனுப்புவீர்கள் என கேட்ட ஸ்ருதி மராதே

this news gives information about Asked the producer and asked who would bed with the hero, Shriya Maratha asked-thayaripalarai pathuthu

நான் உங்களுடன் படுக்கையை வந்தால் நடிகருடன் படுக்க யாரை அனுப்புவீர்கள்?  என கேட்டேன்.நான் எனக்காக மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்காகவும் அப்போது  துணிந்து செயல்பட்டேன் என கூறினார்.

பாலிவுட் சினிமாவில்  பிரபலமானவர் நடிகை ஸ்ருதி மராதே.இவர் தமிழில் “இந்திர விழா” , “நான் அவன் இல்லை-2” , “குரு சிஷ்யன்” ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இவர் கூறுகையில் , நான் 16 வயதில்  சினிமா துறைக்கு வந்தேன். அதிக பாராட்டு களையும் பெற்றேன். மேலும் கேமராவுக்கு பின்னால் பல  அவமானங்களையும் சந்தித்து உள்ளேன்.

நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய பட ஒன்றில் நீச்சல் உடையில் நடித்தேன்.

சில வருடங்கள் கழித்து நான் பிரபலமானதும் நீச்சல் உடையில் நடித்ததை வைத்து பலர் என்னை கேலி செய்தார்கள்.

அது மனதிற்கு வருத்தமாக இருந்ததது.இந்நிலையில் நான் ஒரு தயாரிப்பாளர் சந்தித்தேன்.அவர் தயாரிக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என கூறினார்.

முதலில் நடிப்பதற்கு சம்பந்தமான விஷங்களை பேசினார்.அப்போது அவர் திடீரென  படுக்கைக்கு அழைத்தார். அதை கேட்டு அதிர்ச்சி ஆனேன்.

பிறகு நான் உங்களுடன் படுக்கையை வந்தால் நடிகருடன் படுக்க யாரை அனுப்புவீர்கள்?என கேட்டேன்.நான் எனக்காக மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்காகவும் அப்போது  துணிந்து செயல்பட்டேன் என கூறினார்.