கால் செய்து கதை கேட்டு ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்குமார்! எந்த படம் தெரியுமா?

ajith kumar

Ajith Kumar : மருதமலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அஜித்குமார் தவறவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மருதமலை படம். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான்.

ஆனால், அந்த சமயம் நடிகர் அஜித்குமார் வேறு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்த காரணத்தால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்த தகவலை படத்தை இயக்கிய இய்குனார் சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதன் முதலாக மருதமலை படத்தில் அஜித்தை நடிக்க வைக்க தான் நான் ஆசைப்பட்டேன்.

மருதமலை படத்திற்கு முன்னதாக நான் தலைநகரம் படத்தை இயக்கி இருந்தேன். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு  என்னுடைய நெருங்கியவர் ஒருவருக்கு  அஜித் சார் கால் செய்து படம் நன்றாக இருந்தது எனக்கு கதை இருந்தால் சொல்ல சொல்லுங்கள் என்று கேட்டார். பிறகு போன் வாங்கி நான் என்னிடம் கதை இருக்கிறது சார் என்று சொன்னேன்.

படத்தின் கதையை கேட்டுவிட்டு அவர் கதை நன்றாக இருக்கிறது என்று கூறினார். ஆனால், இப்போது இந்த கதையை என்னால் பண்ண முடியாது என்று கூறிவிட்டார். அந்த சமயம் அவர் கிரீடம் படத்தில் நடித்து கொண்டு அதற்கான படப்பிடிப்பு போய்க்கொண்டு இருந்தது. எனவே, பாதியில் வரமுடியாது என்று கூறிவிட்டார். அதன்பிறகு தான் படத்தின் கதையை அர்ஜூனிடம் கூறினேன். அவர் கதையை கேட்டு விட்டு படத்தில் நடிக்கிறேன் என்று கூறி நடித்தார்” எனவும் சுராஜ் தெரிவித்துள்ளார். இந்த மருதமலை படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்