நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!

Default Image

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார்.

சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் உருக்கமான பேட்டி ஒன்று கூட கொடுத்திருந்தார். மேலும், அவருடைய உடல் தற்போது சீராகிவிட்டதாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில, மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எந்த காரணத்திற்காக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த வேறெந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த செய்தியை அறிந்த சமந்தா ரசிகர்கள் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்