பொன்மகள் வந்தாள் தொடர் தம்பதியரின் காதல் விவகாரம் .! உண்மையை கூறிய நடிகர்.!

நடிகர் விக்கி பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விக்கி பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் மேக்னா . அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் ஆவர். இந்த நிலையில் டான் டோமிக்கும், மேக்னா வின்சென்ட்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர்.

அதனையடுத்து குடும்பநல நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. மேலும் டான் டோமி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், விரைவில் திருமணம் இருக்க கூடும் என்றும் கூறப்பட்டது. மேலும் மேக்னா வின்சென்ட் அவர்களும் தன்னுடன் பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த விக்கி என்ற நடிகரை மறுமணம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தொடரின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், அதனால் தான் கணவருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஆனால் நடிகர் விக்கி இதனை மறுத்து பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அனைத்து குடும்பங்களில் இருப்பது போல் எங்கள் குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளதாகவும், அதனை நாங்களே பார்த்து கொள்வோம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கு 6வயதில் ஒரு மகன் உள்ளதாகவும், அவனுடைய வாழ்க்கையும், எதிர்காலமும் எனக்கு முக்கியம் என்றும், எங்கள் வாழ்க்கையை தயவுசெய்து கெடுக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார். மேக்னாவின் கணவரோ விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது