‘தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 சிக்குவாங்க’..பகீர் கிளப்பிய ரேகா நாயர்!

சென்னை : தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் சுமார் 500 பேருக்கு மேல் சிக்குவார்கள் என ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

rekha nair

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இது ஒரு புறம் புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேரளாவை போல தமிழுலும் கமிட்டி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

குறிப்பாக, நடிகர் விஷால், நடிகை ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள். அவர்களைத்தொடர்ந்து,   எந்த விஷயங்கள் என்றாலும் தைரியமாக  பேசும்,  நடிகை ரேகா நாயர் மலையாள சினிமாவில் எழுந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போது,  பேசிய அவர் ” பாலியல் தொல்லை என்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை மற்ற எல்லா மொழித்துறையிலும் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ் சினிமாவிலும் பாலியல் புகார்கள் இருப்பதாக பேசினார். இது பற்றி பேசிய ரேகா ” தமிழ் சினிமாவில் கூட லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளது. மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைபோல தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 பேர் சிக்குவார்கள்” எனவும் தெரிவித்தார்.

அதைப்போலவே, இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி நடிகைகள் புகார் செய்தால் அந்த நடிகர்கள் திரும்பி கால் செய்து மிரட்டவும் செய்கிறார்கள் எனவும் பெயர்களை குறிப்பிடாமல், நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்