வீட்டுமனை வாங்குவோர்க்கு ஓர் நற்செய்தி!வீட்டுமனை விலையில் அதிரடி மாற்றம்…..

Default Image

இந்திய அளவில் வீட்டுமனை,ரியல் எஸ்டேட் மிகவும் வருமானம் உள்ளதாகவும் ,விலை அதிகமாகவும் உள்ள துறை ஆகும்.எனவே சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மனைகளின் மதிப்பு சரிந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது .
சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நைட் பிரான்க் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியதால் இந்த சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
நாட்டிலேயே மிக அதிகமாக புனேவில் வீட்டு மனைகளின் விலை 7 விழுக்காடு குறைந்துள்ளது. வாங்கும் ஆர்வம் குறைந்ததால் சென்னையிலும் வீட்டுமனைகளின் விற்பனை 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.
எனினும் 50 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை விற்கும் நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்துள்ளன, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற மக்கள் விரும்புவது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கொடி கட்டிப்பறந்த 2010ம் ஆண்டில் நாடுமுழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 3 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளே கட்டப்பட்டுள்ளன.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்