தருமபுரியில் ரூ.10 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை!

Default Image

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டுச் சந்தையில், பொங்கல் பண்டிகையொட்டி அதிகாலையில் இருந்தே தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.
சந்தை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாயின. 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சந்தையில் குவிந்த வியாபாரிகள், வழக்கத்தை விட அதிக அளவிலான ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 10 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்