இந்தியா ராணுவத்துக்கான நிதி நாட்டின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது!

Default Image

ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிடப்படுவதாக  தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டைக் கட்டமைப்பதில் ராணுவத்தின் பங்கு என்கிற தலைப்பில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசினார்.

அப்போது ராணுவ வீரர்கள் எல்லையைக் காப்பதாலேயே அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யலாம் என நம்பிக்கை பிறப்பதாகவும் இதன் மூலம் வெளிநாட்டு முதலீடு பெருமளவு ஈர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி உட்கட்டமைப்பு மேம்பாடு, சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்காகச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்