இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை.!

Rain

Weather Update: 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலிம் தென்காசி, தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 ஆகவும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக லேசான மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்