மக்களே! தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

தமிழகத்தில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

WeatherUpdates

சென்னை : லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில், இன்று 17-மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரையில்,அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi