வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு! இந்த 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை!

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.

heavy rain

சென்னை :காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்.

நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 23) அதிகாலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் நாளை (மே 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் இன்று (மே 23) கன முதல் மிக கனமழைக்கு வாய்பு எனவும், நாளை (மே 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைகான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.