வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

low pressure area in the Bay of Bengal

சென்னை :வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், வரும் 29ம் தேதி, மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வங்காளதேசம் மற்றும் கங்கை நதியான மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்துஅடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வங்காளம், வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் அருகே நகரக்கூடும் என்றும் கூறியுள்ளது.

இதன் காரணமாக, அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளுக்கு, குறிப்பாக குஜராத், பாகிஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைகளில் ஆகஸ்ட் 30 வரை மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

வருகின்ற 29ம் தேதி மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்