21 கேக்குகளை வாளால் வெட்டிய 17 வயது சிறுவன் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.
மும்பையின் போரிவிலியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில்,அந்த சிறுவன், மேஜையில் வைக்கப்பட்டிருந்த 20-21 கேக்குகளை வாளால் வெட்டுவதும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பின்னின்று உற்சாகப்படுத்துவதும் பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாமல் இந்த வீடியோ பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலும் பரவியது.
மேலும் இச்சம்பவம் குறித்து மும்பையின் MHB காவல்துறை, தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டியதற்காக ஆயுதச் சட்டத்தின் கீழ் 17 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
unknown node