அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது என விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட வில்லை.இந்நிலையில் விமானம் நீரில் மூழ்கவில்லை அதன் காரணமாக பெரும் விபத்தில் இருந்து தப்பினர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் ஏற்பட்டது.