திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல்லுக்கு பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை

This news gives information about George Bell, the senior priest of the church, was sentenced to six years in a sexual case

விசாரணை முடிவில்  கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினார். கடந்த 1990 -ம் ஆண்டு பிற்பகுதிகளில் 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக  தவறான முறையில் நடந்து கொண்டதாக ஜார்ஜ் பெல் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை முடிவில்  கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள  கார்டினல் பெல் ஜூன் மாதத்தில் தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.