முக்காணியில் குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக கடையடைப்பு பஸ்மறியலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முக்காணியில்  15நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து முக்காணி  பிரமுகர் M.கணேசன் தலைமையில் 2மணி நேரம் சாலை மறியல்

unknown node

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று [7.8.2017.9.30 am  to 12.10 pm] முக்காணியில்  15நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து முக்காணி  பிரமுகர் M.கணேசன் தலைமையில் 2மணி நேரம் சாலை மறியல் நடந்தது,காலி குடங்களுடன் 1000 கணக்கான  முக்காணி  பொதுமக்கள் ஈடுபட்டனர் . கடையடைப்பும் நடந்தது.

unknown node

அரசு அதிகாரிகள்ஏரல் பாலத்திற்கு கீழ்   உள்ள  குழாய்களில் சமீபத்தில்  சேர்மன்சாமி கொடைவிழாவில் அடைக்கப்பட்ட அடைப்புகளை நீக்கியதும் வாழவல்லான் குடிநீர்  வடிகால் வாரியத்திற்கு தண்ணீர்  வர துவங்கியது.இன்று  மாலை 6 மணிக்குள் பம்பிங் செய்யப்பட்டு நாளை காலை 7மணிக்கு முக்காணி பகுதிக்கு விநியோகிப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆற்றுக்குள் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கவும் தடைசெய்யப்பட்டுள்ளது

unknown node

போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தையில்  ஈடுபட்ட அரசு அதிகாரிகள் நாளை முதல் சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததால் இரண்டு மணி நேரம் நீடித்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

unknown node

போராட்டம் காரணமாக திருச்செந்தூர் , தூத்துக்குடி  பேரூந்துகள் மாற்றுப்பாதையில் சென்றன.

unknown node

பேச்சுவார்த்தையில்  ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் அருள் பையாஸ் திருச்செந்தூர்  DSP சிபு, தூத்துக்குடி  ADSP ராஜாராம், குடிநீர்  வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லதம்பி ஆத்தூர்  இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,ஆறுமுகநேரி  இன்ஸ்பெக்டர்  சிவலிங்கம் உட்பட பலர் ஈடுபட்டனர் ,

unknown node
முக்காணியில் குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக கடையடைப்பு பஸ்மறியலால் பரபரப்பு