unknown node
கடலூர்: பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்திற்கு எதிராக 31ம் தேதி கடலூரில் மதிமுக போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார். மஞ்சக்குப்பம் அஞ்சலகம் அருகில் மல்லை சத்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். கடலூர், நாகை மாவட்டங்களில் மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மண்டலத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனவும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.