இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்….சஞ்சய் பங்கர்…!

Default Image

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் பலவீனங்களைப் பற்றி முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய அவர் தோனி அதிக வயதான வீரர்களை வைத்து களத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

மேலும் வயதான வீரர்களை எந்தெந்த இடத்தில் சரியாக பீல்டிங் நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை, தோனி ஒரு கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலும் சில அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த அனுபவங்களை தோனி எப்படி சரியாக கையாளப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.

மேலும் மிகவும் வயதானவர்கள் பேட்டிங் பவுலிங்கில் எந்த சவாலையும் எதிர் கொள்ளமாட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி போட்டிகளில் சவாலானது பில்டிங் மற்றும் வேகமான செயல்பாடுகள் தான். பீல்டிங் மூத்த வீரர்களை அவர் எப்படி கையாளப் போகிறார் என்று தோனிக்கே சவாலாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறன் மேலும் தோனியின் ஆட்டத்தை காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்