கடற்கரையோரம் நடந்து சென்ற பெண்ணை கோடீஸ்வரியாக்கிய விலையுயர்ந்த பொருள்….!

Default Image

தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்ற பெண்ணுக்கு கிடைத்த திமிங்கலத்தின் வாந்தி. 

பொதுவாக கடல் என்றாலே பல விதமான பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய ஒன்று என்றுதான் கூறமுடியும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கடற்கரையோரம் வித்தியாசமான ஒரு பொருள் ஒதுங்கி கிடப்பதை கண்டு, அருகில் சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறொன்றும் இல்லை. விலை உயர்ந்த பொருளாக கருதப்படும் திமிங்கலத்தின் வாந்தி தான்.

இந்த வாந்தி வாசனை திரவியங்கள் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த பொருளுக்காக வாசனை திரவிய நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து சிரிப்பான் அவர்கள் கூறுகையில், இது எனக்கு அதிர்ஷ்டம் தான். இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். என் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் எடுத்துள்ள திமிங்கலத்தின் வாந்தியின் மதிப்பானது, இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen