100 கோடி சொத்தை அனுபவிக்க தந்தை போட்டு வைத்த கண்டிஷன்..!தவிக்கும் மகள்..!

Default Image

100 கோடி சொத்தை அனுபவிக்க தனது மகளுக்கு போட்டு வைத்த கண்டிஷனால் தவிக்கும் பரிதாப நிலையில் மகள் இருக்கிறார்.

12 மில்லியன் டாலர் சொத்துக்கள் உடைய ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தனது சொத்துக்களை அனுபவிக்க கண்டிஷன் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது மகளான கிளாரா பிரவுனுக்கு தெரிவித்துள்ள கண்டிஷன் என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தரமான வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், இதுதான் தந்தையின் கடைசி ஆசை என்றும் தெரிவித்துள்ளார். இதை செய்தால் மட்டுமே தன்னுடைய சொத்துக்கள் கிளாராவுக்கு சென்றடையும் என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்.

கிளாராவுக்கு சிறிய வயதிலிருந்தே ஏடிஎச்டி என்ற கவனக்குறைவு பிரச்சனை இருக்கிறது. இதனால் தினமும் அவர் போராடி வருகின்றார். இந்நிலையில் பல்வேறு முயற்சி செய்தும் அவரால் ஒரு நிரந்தர வேலையை பெற முடியவில்லை. இதற்கு காரணம் இவருக்கு உள்ள இந்த பாதிப்புதான். மேலும் இவரால் கார் கூட ஓட்ட கற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் அவரால் ஒரு நிரந்தர வேலையை தேடி பெற முடியவில்லை. இதன் காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கிளாரா தனது தந்தை முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என்னுடைய உரிமையை தயவுசெய்து எனக்கு கொடுங்கள். நான் மிகவும் பாதிப்படைந்து உள்ளேன். எவ்வளவு முயற்சி எடுத்தும் என்னால் நிரந்தர வேலையை பெற முடியவில்லை என அவருடைய குடும்பத்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு கூட அவர் வாரம் 40,000 பெற்று வந்துள்ளார். அதையும் பல நேரங்களில் தராமல் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளாரா தினசரி வேலைகளை செய்யவே சிரமப்பட்டு வருவதால் தன்னால் நிரந்தர வேலையை பெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். அதனால் நீதிமன்றம் மூலமாகவாவது தனக்கு சரியான நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்