சம்பவத்தில் இறந்து போன சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர். பூபதி உள்ளிட்ட 5 பேரை வாழப்பாடி காவல் துறை கைது செய்து அவர்கள் மீது கூட்டு வன்புணர்வு கொலை மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தை சேர்ந்த பரமசிவம்.இவரின் 10 வயது மகளை மதுபோதையில் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்பாபு, ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோர் அருகிலுள்ள பெருமாள் […]
சேலம் – கரூர் இடையே மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து மேலூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர் வழியாக கரூருக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 87 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரயில்பாதையை மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து, சோதனை முறையாக ரயில் இயக்கப்பட்டது. சேலம் கோட்ட ரயில்வே தலைமை துணை பொறியாளர் […]
தேசிய அளவிலான நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சேலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் புனே_வில் நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான பென்ஞ்ச் பிரஸ் போட்டியில் சேலத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினர்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டியில், வீரர் ஜித்து என்ற வீரர் 90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதே போல அக்டோபர் மாதம் திருநெல்வேலி […]
சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]
சேலத்தில் காயத்ரி என்ற திருமணமான பெண் சீனிவாசன் என்பவரோடு தொடர்பு வைத்ததாக தெரிகிறது.இதனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் காயத்திரியை கண்டித்துள்ளனர்.இதனால் அந்த பெண் சீனிவாசனுடன் உள்ள தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்ததால் ஆத்திரமடைந்த சீனிவாசன் இன்று காலை காயத்திரி மீது ஆசிட்டை வீசி தப்பி சென்றுள்ளார். காயத்திரி மீது ஆசிட் வீசியதை பார்த்து அதிர்ந்து போனவர்கள் காயத்திரியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் சேலம் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: நாளைய தமிழகத்தை உருவாக்கும் பொறுப்பு நமது கையில் உள்ளது. மக்கள் யாரும் ஏழைகள் அல்ல; ஏழைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லும் நேரம் இது. புரட்சி, புரட்சி என்று பேசினால் போதாது; மக்கள் உதவியின்றி எந்தப் புரட்சியும் நடக்காது என்று நடிகர் கமல் பேசினார். DINASUVADU
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 18 வயதே ஆன காவியா என்ற அந்த பெண், அதே பகுதியை சேர்ந்த வசந்த குமார் என்பவரை தனது பள்ளி பருவத்திலேயே காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. தற்போது […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் உள்ளன. இதில் இரண்டு அலகுகளில் ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் […]
8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து […]
சேலம் நெத்திமேட்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெத்திமேடு பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து, +2 முடித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மாணவிகளை கைது செய்யப்போவதாகவும், கல்லூரியில் சேர முடியாதவாறு செய்துவிடுவதாகவும் ஒருமையில் பேசினார். இதனால், மாணவிகளுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் கடும் […]
பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன். மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு […]
சேலம் : ஏற்காடு, குண்டூர் ஆனைவாரி முட்டல், வழக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலையேற்ற பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மலை வாழ் மக்களை பாதுகாக்க கோரியும் ஆந்திராவில் படுகொலை செய்யபட்ட தமிழக மலைவாழ் மக்களுக்கு நீதி கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா மற்றும் மலைவாழ் மக்கள் இளைஞர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரவீன்குமார் உள்ளிட்டு ஏராளமான வாலிபர்கள் பங்கெடுத்தனர்.