Apple MacBook : மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தப்பட்ட M3 சிப்செட்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ஆப்பிள் M2 சிப் உடன் வரும் ஓல்டு ஜெனெரேஷன் மேக்புக் ஏர் விலையையும் குறைத்துள்ளது. அதன் படி, 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்செட் கொண்ட 13 இன்ச் மேக்புக் ஏர் இப்போது ரூ.10,000 குறைந்து ரூ.99,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் […]
ஹெச்பி ஸ்மார்ட் சிம் லைஃப் என்னும் இந்த சலுகையில் தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்புடன், 100ஜிபி டேட்டா மற்றும் ஜியோ டிஜிட்டல் லைஃப் நன்மைகளை பயனர்களுக்கு அளிக்கிறது. தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களுடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 100ஜிபி இலவச டேட்டா சலுகை பொருந்தும்.ஹெச்பி லிருந்து ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்பை வாங்கினால், 100ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம். புதிய HP LTE லேப்டாப்புடன் புதிய ஜியோ சிம்மிற்குச் சந்தா செலுத்தினால், 365 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டாவைப் […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தாகவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மடிக்கணினி என்பது பல காலமாக கனவாகவே இருந்து வந்த நிலையில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]
தனது மனைவி லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு கொண்டு கழுவியதால் கணவர் விவாகரத்து கோரியுள்ளார். பெங்களூரு ஆர்த்தி நகர் காலனியைச் சேர்ந்த ராகுலுக்கும், சுமனாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மென்பொருள் பொறியாளருமான ராகுல் அவரது மனைவியும் வேலையின் காரணமாக இங்கிலாந்து சென்றனர். எம்பிஏ பட்டதாரியான இவரது மனைவி வேலை செய்யாமல் வீட்டில் இருந்துள்ளார். வாழ்க்கையின் முதல் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாக ராகுல் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் […]
15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‘எல்காட்’ டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்றுள்ள ஊழல் திருவிளையாடல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை (model) அளித்து அதன் சோதனை அறிக்கையும்(TestReport) கொடுத்திருந்தது. ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள்; இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை. அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து ஒரு மடிக்கணினிக்கு ரூ.3000 விதம் அடைந்த சட்டவிரோத லாபம் […]
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் வாங்க பணம் இல்லாததால் சாக்கடை அள்ளி பணம் சம்பாதித்த மாணவனுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின். தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தற்போது மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிளிலும் ஆன்லைன் மூலமாக தற்பொழுது பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும் பாடம் […]
அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி வழங்கவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் இலவச மடிக்கணினி திட்டம்.தற்போது இந்த திட்டம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆணையில், 2017-18, 2018-19 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு நாளைக்குள் மடிக்கணினி […]
இன்றைய சமீகத்தில் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்களுக்கு தாங்களே, ஆரோக்கியக்கேடுகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். இன்று குழந்தைகள் முதல் முதுமை அடைந்தவர்கள் வரை அனைவருமே தொலைபேசி அல்லது கணினியை உபயோகப்படுத்துகிறோம். இவற்றை நாம் பயன்படுத்தும் போது, கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதனால் கண்ணில் ஈரப்பதம் சுரக்காமல், உலர் கண் நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வின்படி, இந்த நோயினால் 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக […]