திமுகவினர் பச்சோந்தியை கூட தோற்கடித்து விடுவார்கள் – ஜெயக்குமார்

jeyakumar

காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கரையான் புற்று எடுக்க கருநாகம் உள்ளே புகுந்து விட்டது என சொல்வார்கள் அல்லாவா? அதுபோல தான் திமுக உள்ளே புகுந்து விட்டது. அதிமுக 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுகவில் கிளைகளாக செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம். அதே போல தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் … Read more

திமுக ஆட்சிக்கு வந்தாலே திரைத்துறை சுதந்திரமாக செயல்படாது – ஜெயக்குமார்

jeyakumar

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது; பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவினரை பிரிக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்! – எஸ்.பி வேலுமணி பேட்டி இந்த … Read more

திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் – ஜெயக்குமார்

திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் என்பதை மேடையில் உறுதி செய்தார் கே.என்.நேரு என ஜெயக்குமார் ட்வீட். திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 … Read more

சசிகலா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் – ஜெயக்குமார்

திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சனம்.  சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் வளர்ந்த கட்சியைப் பற்றியே விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் … Read more

திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பதவி தரலாமே ..! – ஜெயக்குமார்

தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது என ஜெயக்குமார் விமர்சனம்.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பதவி தரலாமே என் மகனுக்கு ஜெயலலிதா பதவி கொடுத்தது வாரிசு அரசியல் ஆகாது என  தெரிவித்துள்ளார்.

விடியா அரசுக்கு நன்றி – ஜெயக்குமார்

அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி என ஜெயக்குமார் ட்வீட்.  நேற்று சென்னையில், இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் … Read more

ஒரு கழிவறையில் 2 வெஸ்டர்ன் டாய்லெட்…! அற்புதமான திராவிட மாடல்…! – ஜெயக்குமார்

அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக என ஜெயக்குமார் விமர்சனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.அங்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட  திட்ட அலுவலகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த திட்ட அலுவலகத்தில்  ஒரே கழிவறையில், இரண்டு பேர் அருகருகே அமரும் வண்ணம் வெஸ்டர்ன் … Read more

மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் – ஜெயக்குமார்

திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஓபிஎஸ்க்கு சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சபாநாயகர் இடம் வழங்கக் கூடாது. நான் சபாநாயகராக இருந்தால் நிச்சயம் இடம் வழங்க மாட்டேன். திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை … Read more

அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன – ஜெயக்குமார்

அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் பேருந்தில் போக ஆவமானப் படுகிறார்கள்; அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன. ஒபிஎஸ்-க்கு தொண்டர்கள் … Read more

சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன் – ஜெயக்குமார்

சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என ஜெயக்குமார் விமர்சனம்.  அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறுகையில், எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்று அடிப்படையில் மரியாதையை நிமித்தமாகவே அண்ணன் மண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன் என தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி … Read more