காஷ்மீர் முன்னள் முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை! வைகோ உச்சநீதிமன்றத்தில் மனு!

Default Image

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்தவண்ணம் இருக்கிறது.  சர்வதேச அளவிலும் இதே நிலைதான்.

காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்து, பரூக் ஆபத்துல்லாவை கைது செய்யவுமில்லை, அவர் வீட்டுக் காவலிலும் இல்லை, அவர் சுதந்திரமாகவே உள்ளார் என கூறினார்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக கட்சி தலைவருமான வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தங்கள் கட்சி சார்பி; 15ஆம் தேதி மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டிற்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வருகின்றோம். அந்த மாநாட்டிற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க தீர்மானித்தோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரை கண்டறிந்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது, மாநிலங்களவை உறுப்பினர் என்பதால் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைத்து இருப்பது தொடர்பான சர்ச்சைகளுக்கு இதன் மூலம் பதில் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்