இந்த தொடரில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் – யுஸ்வேந்திர சாஹல்..!

Default Image

இலங்கைக்கு எதிரான போட்டியில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் என யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாத காரணத்தால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர்.

இதில் ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 18- ஆம் தேதி முடிகிறது.  டி 20 போட்டி ஜூன் 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த போது, கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. இந்தத் தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன். நான் பந்துவீச்சு பயிற்சியாளருடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன் அவர்கள் தொடர்ந்து எனக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள் அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். இப்போது எனது முக்கிய கவனம் இந்த தொடர் மட்டும் தான்.

நான் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரில் விளையாடுகிறேன், ஆனால் நாங்கள் ஏற்கனவே இங்கு விளையாடியுள்ளோம். இந்தத் தொடரில் நீங்கள் அதிக நம்பிக்கையுள்ள யூஸியைக் காண்பீர்கள். நான்  மேலும் புதிதாக பந்து வீச முயற்சிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்