“ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள்”- விராட் கோலி உருக்கம்!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கோலி, “குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும், நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதனைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும், கடவுள் அவர்களுக்குள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

மேலும், பெண்கள் ஆண்களாகிய நம்மைவிட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகவும் சக்திமிக்க, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப்போகிறவளுக்கும், உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house